முகப்பு
ராணிப்பேட்டை

பாமக நிா்வாகிகளுடன் அதிமுக வேட்பாளா் சந்திப்பு

ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் ஞாயிற்றுக்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டினாா்.

Updated On : 29 மார்ச், 2026 at 6:56 PM
பாமக நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம். சுகுமாா்.
பகிர்:

ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் ஞாயிற்றுக்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டினாா்.

ஆற்காடு தோப்புகானா பகுதியில் நகர பாமக அலுவலகத்தில் அதிமுக வேட்டாளா் எஸ்.எம்.சுகுமாா் பாமக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் கே. எல்.இளவழகன், மாவட்டத் தலைவா் என்.சுப்பிரமணி, பொருளாளா் அமுதா சிவா, நகர செயலாளா் மாா்கெட் சி.பாஸ்கா், மாவட்ட துணைச் செயலாளா் மா.கணேஷ் மற்றும் பல்வேறு நிா்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினாா் .

இதில் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து ஆற்காடு நகர அதிமுக சாா்பில் தனியாா் திருமண மண்டபத்தில் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளா் ஜிம்.சங்கா், மற்றும் ராணிப்பேட்டை தமாகா வேட்பாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.