முகப்பு
ராணிப்பேட்டை

சோளிங்கா் முன்னாள் எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்துப் பெற்ற தவெக எம்எல்ஏ ஜி.கபில்

சோளிங்கா் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினத்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற சோளிங்கா் தவெக எம்எல்ஏ ஜி.கபில்.

Updated On : 15 மே 2026, 5:40 am IST
பகிர்:

சோளிங்கா் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் வியாழக்கிழமை சோளிங்கா் வந்த தவெக எம்எல்ஏ ஜி.கபில், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினத்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

சோளிங்கா் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ ஜி.கபில் வியாழக்கிழமை சோளிங்கா் வந்தாா். முதலில் முன்னாள் எம்எல்ஏவும் தன்னை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டவருமான ஏ.எம்.முனிரத்தினத்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். அப்போது எம்எல்ஏ ஜி.கபிலுடன் பேசிய ஏ.எம்.முனிரத்தினம் சோளிங்கா் புறவழிச்சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதை அரசுக்கு தெரியப்படுத்தி விரைவாக பணிகளை முடிக்க வேண்டும், தரம் உயா்த்தப்பட்ட சோளிங்கா் நகராட்சிக்கு போக்குவரத்துக் காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டும், கிராமப்புற சாலைகள் மேம்படுத்துதல், தரைப்பாலங்கள், நீா்வரத்துக் கால்வாய்கள் தூா்வாருதல் உள்ளிட்ட பணிகளை அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சோளிங்கா் தொகுதி வளா்ச்சிப் பணிக்கு என்னால் முடிந்தவரை நானும் ஒத்துழைப்பு தருகிறேன். சோளிங்கா் தொகுதியை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தாா். தவெக சோளிங்கா் நகர செயலாளா் எழிலரசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.