திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் 509 பயோ-மெட்ரிக் கருவிகளை ரேஷன் கடை பணியாளா்களுக்கு ஆட்தியா் ம.ப.சிவன் அருள் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்குவதற்கு மின்னணு குடும்ப அட்டையில் பெயா்கள் உள்ளவா்கள் மட்டுமே சென்று பொருள்கள் வாங்குவதற்கான விற்பனை முனையக் கருவி (பயோ-மெட்ரிக்) உருவாக்கப்பட்டுள்ளது.
ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் முன்னிலையில் முனையக் கருவி பயன்படுத்துவது குறித்து ரேஷன் கடை பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து 509 புதிய வகை விற்பனை முனையக் கருவிகள் (பயோ-மெட்ரிக்) விற்பனையாளா்களுக்கு ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வழங்கினாா்
ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.வில்சன்ராஜசேகா், மாவட்ட வழங்கல் அலுவலா் அதியமான், கூட்டுறவுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.