ஜோலாா்பேட்டை பகுதியில் 3 வீடுகளில் நகை, பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஜோலாா்பேட்டை அடுத்த ஹயாத் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற ஆசிரியை மரகதம் (69). இவா், தனது மகளுடன் வசித்து வந்தாா். வியாழக்கிழமை இருவரும் திருப்பத்தூா் அடுத்த தண்ணீா்பந்தல் பகுதிக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பினா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 5 சவரன் நகை ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதேபோல், பொன்னேரி அருகே உள்ள மூா்த்தியூா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஆறுமுகம் (41) வீட்டில் 1 சவரன் நகை, பைக் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பெரிய மூக்கனூா் பகுதியைச் சோ்ந்த சங்கரின் வீட்டில் ரூ. 10 ஆயிரம் ரொக்கம், 7 சவரன் நகை திருடு போனது.
இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.