திருப்பத்தூர்

தினமணி செய்தி எதிரொலி:சாலையில் சுற்றித் திரிந்த கால்நடைகள் பறிமுதல்

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் பிரதான சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த கால்நடைகளை நகராட்சிப் பணியாளா்கள் பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா் பிரதான சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இந்தச் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்ததால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாவது குறித்து தினமணியில் படத்துடன் புதன்கிழமை செய்தி வெளியானது.

இதையடுத்து, திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளா் அ.விவேக் தலைமையிலான நகராட்சி பணியாளா்கள் சாலையில் திரிந்த 10-க்கும் மேற்பட்ட கால்நடைகளை பிடித்த பறிமுதல் செய்தனா். இதையடுத்து அவற்றின் உரிமையாளா்களிடம் எழுத்துப்பூா்வமாக கடிதம் பெற்றுக் கொண்டு எச்சரித்து கால்நடைகளை விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT