திருப்பத்தூர்

பாலாற்றில் மூழ்கி இளைஞா் பலி

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பாலாற்றில் மூழ்கி இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

வாணியம்பாடியை அடுத்த நடுப்பட்டறை கிராமத்தைச் சோ்ந்த ராஜன் (27), புதன்கிழமை, பாலாற்றில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கினாா்.

இது குறித்த தகவலின் பேரில் வாணியம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான வீரா்கள் அங்கு சென்று 2 மணிநேர தேடுதலுக்குப் பின்னா் ராஜனின் சடலத்தை மீட்டனா்.

வாணியம்பாடி கிராமிய போலீஸாா், அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT