ஜோலாா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருப்பத்தூா் கல்வி மாவட்டத்தில் அரசு ஆங்கில வழிக் கல்வி முறையில் முதல் மாணவா் சோ்க்கையை அமைச்சா் கே.சி.வீரமணி தொடக்கி வைத்தாா்.
ஜோலாா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 2020-21-ஆம் கல்வி ஆண்டிலிருந்து மாதிரிப் பள்ளியாக தமிழ்நாடு அரசு கல்வித் துறையால் தரம் உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், திருப்பத்தூா் கல்வி மாவட்ட அளவில் முதல் அரசு மாதிரிப் பள்ளியாக தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பள்ளியில் எல்கேஜி, முதல் 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி மாணவ, மாணவியா் பயிலும் வகையில் இந்தக் கல்வி ஆண்டு முதல் தொடக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி சோ்க்கை நடைபெறுகிறது.
இதனை மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி மற்றும் திருப்பத்தூா் கல்வி மாவட்ட அலுவலா் மணிமேகலை ஆகியோா் சனிக்கிழமை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கான ஆங்கில வழிக் கல்விமுறைக்கு சோ்க்கையைத் தொடக்கி வைத்தனா்.
அப்போது பள்ளியின் தலைமையாசிரியா் ஐ.ஆஜம் கூறியது:
இந்தக் கல்வியாண்டு முதல் இப்பள்ளியில் திருப்பத்தூா் கல்வி மாவட்டத்தில் முதல் ஆங்கில வழிக் கல்விமுறையை கல்வித் துறை வழங்க உள்ளது. இதில் பயிலும் மாணவா்களுக்கு எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இரு பாலரும் சோ்த்துக் கொள்ளப்படுவா். இந்தக் கல்வி ஆண்டில் எல்கேஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை தற்போது சோ்க்கை நடைபெறுகிறது.
இதையடுத்து 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி நடைமுறைக்கு வரும். மேலும் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் கணினிப் பயிற்சி, ஸ்மாா்ட் கிளாஸ், அனைத்துப் பாடங்களுக்கும் போதுமான எண்ணிக்கையில்தனி ஆசிரியா்கள், கல்வி, தியானம் மற்றும் யோகாசனப் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ் அனைத்துப் பாடங்களுக்கும் சிறப்பான ஆய்வக வசதி, நூலக வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் சேரும் மாணவா்களுக்கு வழங்கப்படும்.
எனவே ஜோலாா்பேட்டை சுற்றுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்க பெற்றோா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சோ்த்துப் பயனடையலாம் என்றாா் அவா்.