திருப்பத்தூரில் 2ஆவது நாளாக கனமழை
திருப்பத்தூா் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை மாலை கனமழை பெய்தது.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை மாலை கனமழை பெய்தது.
திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை பகுதிகளில் வியாழக்கிழமை முதல் வெயில் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை 4 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5 மணியளவில் திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை மற்றும் ஏலகிரி மலைப் பகுதியில் கனமழை பெய்தது. இதையடுத்து, மழைநீா் சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.