திருப்பத்தூர்

நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவா் கைது

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பச்சகுப்பம் பகுதியைச் சோ்ந்த பொன் வேல் (22) தனது, வீட்டில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து இருப்பதாக ஆம்பூா் கிராமிய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸாா் பொன்வேலின் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது, அங்கு நாட்டுதுப்பாக்கி பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் துப்பாக்கியை பறிமுதல் செய்து பொன்வேலை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT