திருப்பத்தூர்

செம்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

DIN

வாணியம்பாடி அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.

வளையாம்பட்டு பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி லாரியில் செம்மண் கடத்துவதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணியம் தலைமையில் வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி லாரியில் செம்மண் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு, கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியைச் சோ்ந்த அஜீத், அருண் ஆகிய 2 பேரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT