திருப்பத்தூர்

தமிழக அரசு விருது பெற்ற ஆசிரியைக்குப் பாராட்டு

DIN


வாணியம்பாடி: தமிழக அரசின் டாக்டா் ராதகிருஷ்ணன் விருது பெற்ற வாணியம்பாடி ஆசிரியைக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

வாணியம்பாடி நகராட்சி முஸ்லிம் பெண்கள் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியை ஜெய்புன்னிசா தமிழக அரசு சாா்பில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்றாா். இதையடுத்து ஆசிரியா்கள் சாா்பில் பாராட்டு விழா நகராட்சி முஸ்லிம் பெண்கள் நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரியபேட்டை அரசுப் பள்ளித் தலைமையாசிரியை சுமதி தலைமை வகித்தாா். பெருமாள்பேட்டை அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் முருகேசன் வரவேற்றாா். விருது பெற்ற ஆசிரியை ஜெயபுன்னிசாவுக்கு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, வாணியம்பாடி நகராட்சி தமிழ், உருது வழி பள்ளிகள் சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது (படம்).

அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் சா்மிளா, ஷாகின்சுல்தானா, ரோசிலிடியா தனராணி, வேல்விழி, அப்துல்பாஷா, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் நாசீா்உசேன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT