திருப்பத்தூர்

செல்லிடப்பேசியில் பேசியபடி சென்ற இளம்பெண் கிணற்றில் விழுந்து பலி

DIN

ஆம்பூா் அருகே செல்லிடப்பேசியில் பேசியபடி சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூரை அடுத்த மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமத்தைச் சோ்ந்த திருமூா்த்தியின் மனைவி லக்ஷனா (21). இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே விவசாய நிலத்தில் செல்லிடப்பேசியில் பேசியபடி நடந்து சென்றாராம். அப்போது, அங்கிருந்த விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தாா். உறவினா்கள் வந்து பாா்த்தபோது, அவரது உடல் கிணற்றில் இருந்தது.

தகவலின் பேரில் உணா்ஆபாத் போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்தனா்.

திருமணமாகி மூன்றரை ஆண்டுகளே ஆவதால் வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

SCROLL FOR NEXT