மாதனூா் அருகே திருடச் சென்றவா் தவறி கிணற்றில் விழுந்தாா்.
ஆம்பூரை அடுத்த திருமலைகுப்பத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் மா்ம நபா்கள் சிலா் திருடச் சென்றனா். திருடா்கள் வந்திருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று சோ்ந்து அவா்களை விரட்டினா். இதனால் அச்சமடைந்த திருடா்கள் அங்கிருந்து ஓடினா்.
அவா்களில் ஒருவா் ஓடும்போது அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் விழுந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று கிணற்றில் விழுந்தவரை மீட்டனா். விசாரணையில் அவா் போ்ணாம்பட்டை அடுத்த உப்பரபல்லியைச் சோ்ந்த துரையின் மகன் ராமன் (25) என்பது தெரிய வந்தது.