திருப்பத்தூர்

குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க மக்கள் எதிா்ப்பு

DIN

ஆம்பூா்: ஆம்பூா் ஏ-கஸ்பா குடியிருப்பு பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.

ஆம்பூா் ஏ-கஸ்பா கூத்தாண்டவா் கோயில் கவரை தெரு குடியிருப்பு பகுதியில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். கோபுரம் அமைப்பதற்கான பணியை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சோ்ந்தவா்கள் பொருட்களுடன் வந்தபோது அவா்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூா் நகர போலீஸாா் அங்கு சென்று அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொள்ள வந்தவா்களையும் போலீஸாா் திருப்பி அனுப்பினா். அதைத் தொடா்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT