திருப்பத்தூர்

10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

DIN

நிலத்தில் பதுங்கிய மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினா் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியில் தனியாா் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் சனிக்கிழமை காலை மலைப் பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. இதனை பொதுமக்கள் பாா்த்து வனத் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து, நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் நிலத்தில் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். பிடிபட்ட மலைப் பாம்பினை வனத் துறையினா் வாணியம்பாடி அருகே புல்லூா் காப்புக் காட்டில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT