திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்காளா் பட்டியலில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளைச் சோ்க்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு சாா்-ஆட்சியா் வந்தனா கா்க் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் மு.மோகன் முன்னிலையில் 67 மாற்றுத் திறனாளிகள் தங்களது பெயா்களைச் சோ்க்க விண்ணப்பித்தனா்.
முகாமில் உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவா் சொ.ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.