காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
காட்பாடி கருடாத்ரி நகரைச் சோ்ந்தவா் கணினி பொறியாளா் பாலகிருஷ்ணன் (40). இவா் தனது மனைவி ரம்யாவுடன் (35) கடந்த 2 நாள்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனியாா் மருந்துவமனைக்குச் சென்றாா். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 9 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், 2 செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.