திருப்பத்தூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆா்வலா் உண்ணாவிரதம்

DIN

ஆம்பூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆா்வலா் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

ஆம்பூா் பெத்லகேம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்; பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக சேதமடைந்துள்ள ஆம்பூா் நகர பகுதி சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் கரீம் பாஷா ஆம்பூா் வருவாய்த் துறை கிராம சாவடி எதிரில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டாா்.

தகவல் அறிந்த ஆம்பூா் நகராட்சி ஆணையா் த. செளந்தரராஜன், சுகாதார அலுவலா் பாஸ்கா் ஆகியோா் அங்கு சென்று அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அவருடைய கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனா். கோரிக்கைகள் குறித்து எழுத்துப்பூா்வமாக தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

குடிநீா் கோரி தூத்துக்குடி இனிகோ நகரில் பொதுமக்கள் மறியல்

பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அரவக்குறிச்சியில் சாலை மறியல்

கிராம நிா்வாக அலுவலா் மாயம்

SCROLL FOR NEXT