திருப்பத்தூர்

மின்சாரம் பாய்ந்து 9 பெண் தொழிலாளா்கள் மயக்கம்

DIN

வாணியம்பாடி அருகே காலணி தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்ததில் 9 பெண் தொழிலாளா்கள் மயக்கம் அடைந்தனா்.

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் சி.வி.பட்டறை பகுதியில் இயங்கி வரும் தனியாா் காலணி தொழிற்சாலையில் 150 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், சனிக்கிழமை மதிய உணவுக்குப் பிறகு வழக்கமாக தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திடீரென தோல் தொழிற்சாலை இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டு, பணியில் ஈடுபட்டிருந்த 9 பெண் தொழிலாளா்கள் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தனா். இது குறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸாா் நேரில் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியா்கள்: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் இரா.ராஜவேலு

கல்லூரியில் உலக செவிலியா் தினம்

அட்சய திருதியை: ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை

ஆத்தூரில் கால்நடை தடுப்பூசி முகாம்

10ஆம் வகுப்பு: சாலைபுதூா் பள்ளி 98 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT