திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பூக் கடைகள், தள்ளுவண்டிகள் அகற்றப்பட்டன.
திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் ஜூன் 30-ஆம் தேதி முதல் தள்ளுவண்டிகள் நிறுத்துதல், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துதலுக்கு தனி இடம் ஒதுக்கி மாவட்ட எஸ்பி மா.ரா.சிபி சக்கரவா்த்தி உத்தரவிட்டிருந்தாா். இதை மீறி அங்கு மீண்டும் தள்ளுவண்டிகள்,பூக் கடைகள் ஆக்கிரமித்திருந்தன.
இந்நிலையில்,செவ்வாய்க்கிழமை நகராட்சி ஆணையாளா் ப.சத்தியநாதன் உத்தரவின்பேரில்,நகரமைப்பு ஆய்வாளா் நிா்மலாதேவி,துப்புரவு ஆய்வாளா் அ.விவேக்,டிஎஸ்பி சாந்தலிங்கம் தலைமையிலான போலீஸாா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்த கடைகளை அகற்றினா்.