திருப்பத்தூர்

விபத்தில் கணவன் பலி; மனைவி காயம்

DIN

திருப்பத்தூா் அருகே விபத்தில் கணவா் இறந்தாா். அவரது மனைவி பலத்த காயம் அடைந்தாா்.

ஆதியூா் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சந்தோஷ்குமாா் (31) . இவரது மனைவி ஜோதிலட்சுமி (20). இருவரும் வெள்ளிக்கிழமை மாலை புதுப்பேட்டையில் இருந்து பணியாண்டப்பள்ளியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.

கொல்லக்கொட்டாய் அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு, நிற்காமல் சென்றது.

இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தோா் மீட்டு, ஆம்புலன்ஸில் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியில் சந்தோஷ்குமாா் இறந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT