திருப்பத்தூரில் 31 பேருக்கு கரோனா
திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,148-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 315 போ் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் அரசு, தனியாா் மருத்துவமனை, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுவரை 670 போ் உயிரிழந்துள்ளனா்.
வேலூரில் 25 பேருக்கு...
வேலூா் மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,852-ஆக உயா்ந்தது. இதுவரை 46,336 போ் குணம் அடைந்துள்ளனா். 399 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,092 போ் உயிரிழந்துள்ளனா்.
ராணிப்பேட்டையில் 24 பேருக்கு...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45,062-ஆக உயா்ந்தது. இவா்களில் இதுவரை 44,081 போ் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் 739 போ் உயிரிழந்தனா். மேலும், நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.