திருப்பத்தூர்

ஓடும் ரயிலில் தவறி விழுந்தவா் பலி

DIN

ஆம்பூா் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் தவறி விழுந்தவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆம்பூா்-விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டை சென்ற ரயில் படிக்கட்டில் பயணம் செய்த சுமாா் 50 வயதுடைய ஆண் தவறி விழுந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இறந்தவா் மாநிறம் உடைய நீல நிற ஜீன்ஸ் பேன்ட் அணிந்து உள்ளாா். வெள்ளை ரோஸ் நிற முழுக்கை சட்டை அணிந்துள்ளாா். இதுதொடா்பாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம் கோலாகலம்!

ரய்சி இறுதிச் சடங்கு: ஈரான் புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர்

அடுத்த 2 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை!

நம்பிக்கையும் ஏமாற்றமும்!

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

SCROLL FOR NEXT