திருப்பத்தூர்

சாலையில் வேருடன் சாய்ந்த புளிய மரம்: 3 மின்கம்பங்கள் சேதம்

DIN

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியை அடுத்த சொரக்காயல்நத்தம் ஊராட்சி அலுவலகம் எதிரே புளியமரம் திங்கள்கிழமை காலை திடீரென வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதில் 3 மின் கம்பங்கள் சேதமடைந்தன.

தகவலறிந்த நாட்டறம்பள்ளி மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அங்கு மின் இணைப்பைத் துண்டித்தனா். இதனால் அங்கு அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

வருவாய்த் துறையினா், மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடந்த புளியமரத்தை பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT