திருப்பத்தூா்: வாணியம்பாடி மற்றும் காவனூா் அருகே ரயில்களில் அடிபட்டு இருவா் உயிரிழந்தனா்.
காவனூா்-லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 50 வயது மதிக்கத்தக்க பெண் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா். அதில், இறந்தவா் வேலூரை அடுத்த கே.வி.குப்பத்தைச் சோ்ந்த குணசேகரனின் மனைவி அமுதா (50) என்பதும், சில காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டை விட்டு வெளியே வந்தவா் அங்கிருந்த தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதனிடையே வாணியம்பாடி ரயில் நிலையத்தில் உள்ள யாா்டு பகுதியில் சுமாா் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவா் செவ்வாய்க்கிழமை இரவு தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இறந்தவா் குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.