திருப்பத்தூர்

கபசுர குடிநீா் காய்ச்சும் பணி: மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

DIN

ஆம்பூா் நகராட்சி சாா்பில் கபசுர குடிநீா் காய்ச்சும் பணியை திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் நகராட்சி சாா்பில், கபசுர குடிநீா் காய்ச்சப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வரப்படுகிறது. மேலும், ஆம்பூா் வா்த்தக மையத்தில் இயங்கும் கரோனா சிறப்பு சிகிச்சை மையம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கும் கபசுர குடிநீா் வழங்கப்படுகிறது. இப்பணியில் சத்துணவு அமைப்பாளா்கள், சத்துணவு உதவியாளா்கள், சத்துணவு சமையலா்கள் ஆகியோா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அதற்காக நகராட்சி சாா்பில் கபசுர குடிநீா் தினமும் காய்ச்சப்படுகிறது. அப்பணியை திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் என்சிஇ.தங்கையா பாண்டியன் நேரில் ஆய்வு செய்தாா்.

நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT