திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே சிக்னல் கோளாறு பணியில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள் 2 பேர் ரயில் மோதி பலி 

ஆம்பூர் அருகே ரயில் பாதையில் சிக்னல் கோளாறு சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது சரக்கு ரயில் மோதி ரயில்வே ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். 

DIN

ஆம்பூர் அருகே ரயில் பாதையில் சிக்னல் கோளாறு சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது சரக்கு ரயில் மோதி ரயில்வே ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். 
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை ரயில்வே சிக்னல் கோளாறு காரணமாக சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியிர்கள் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா செல்லும் சரக்கு ரயில் மோதியதில் திருப்பத்தூர் புதூர்நாடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் சீனியர் டெக்னீஷியன் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரவேஷ் குமார் (23) டெக்னீஷியன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
சடலங்களை மீட்டு, ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு! ஆனால்...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

SCROLL FOR NEXT