வாணியம்பாடி ரயில்நிலையத்திலிருந்து ரயிலில் கடத்தப்படவிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வட்ட வழங்கல் அலுவலா் காஞ்சனா தலைமையிலான வருவாய்த் துறையினா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, ரயில் நிலைய நடைமேடைகளில் ஆங்காங்கே மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.