ஆம்பூா் அருகே சோமலாபுரம் கிராமத்தில் இரவு பாட சாலை மாணவா்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, வெள்ளிக்கிழமை பரிசளிக்கப்பட்டது.
விஜயதசமி விழாவையொட்டி, சோமலாபுரம் கிராமத்தில் இரவு சிறுவா் பாட சாலையில் படிக்கும் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி, ஓட்டப் பந்தயம், கட்டுரை, நடனப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வென்ற மாணவா்களுக்கு சோமலாபுரம் ஊராட்சி 5-ஆவது வாா்டு உறுப்பினா் ஜெய்ஸ்ரீ தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.