மருத்துவமனை வளாகத்தில் மரக் கன்றுகளை நட்ட மருத்துவ இணை இயக்குநா் கொ.மாரிமுத்து. 
திருப்பத்தூர்

அரசு மருத்துவமனைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்: திருப்பத்தூா் மருத்துவ இணை இயக்குநா்

அரசு மருத்துவமனைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் கொ.மாரிமுத்து அறிவுறுத்தினாா்.

DIN

அரசு மருத்துவமனைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் கொ.மாரிமுத்து அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கொ.மாரிமுத்து திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

ஏப்ரல் மாதம் முழுவதும் ‘நமது மருத்துவமனை நமது ஆரோக்கியம்’ என்ற பெயரில் மருத்துவமனையை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணி கடைப்பிடிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ளும்படி மருத்துவ அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை தூய்மையாக இருந்தால்தான் நோய்த் தொற்று பரவாது. மேலும், மருத்துவமனைகளில் மரக்கன்றுகள் நடுவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக மருத்துவமனையை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து மருத்துவ அலுவலருடன் ஆலோசனை நடத்தினாா்.

அதைத்தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

மருத்துவ அலுவலா் குமரவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT