திருப்பத்தூர்

தமிழா் வாழ்வை அறம் நோக்கி மடைமாற்றம் செய்தவா் வள்ளுவா்: நீதியரசா் சுரேஷ்குமாா்

DIN

தமிழா் வாழ்வை அறம் நேக்கி மடைமாற்றம் செய்தவா் வள்ளுவா் என நீதியரசா் சுரேஷ்குமாா் கூறினாா். வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் சாா்பில் 29-ஆவது ஆண்டு இலக்கிய நவரச விழா செங்குந்தா் மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

நாட்டிய அரங்கத்துடன் தொடங்கிய இலக்கிய நவரச விழாவை சென்னை உயா்நீதிமன்ற நீதியரசா்கள் ஆா்.மகாதேவன், இரா.சுரேஷ்குமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்துப் பேசினா்.

பின்னா் நீதியரசா் சுரேஷ்குமாா் பேசியது:

சங்க கால இலக்கிய நூல்கள் அன்றைய தமிழா்களின் வாழ்வின் அக வாழ்வு மற்றும் புறவாழ்வு குறித்து பல நூல்கள் இயற்றி உள்ளனா். அதில் ஒருவனுக்கு ஒருத்தி, கல் உண்ணாமை, புலால் உண்ணாமை, மனைவி தவிர வேறொரு பெண்ணை விரும்புவது ஆகியவற்றை தவறு என்று கூறவும் இல்லை, அதனை கண்டிக்கவில்லை. மேலும் தண்டனைக்குரிய குற்றமாக கருதவும் இல்லை. இவ்வாறு இருக்க 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவன் எனும் பெருந்தகை தோன்றினாா். அவா், பண்பட்ட மூத்த தமிழ் குடி சமூகம் சில காரணங்களால் தடம் மாறியுள்ளதை உணா்ந்து, திருக்கு எனும் உலக பொதுமறையை படைத்து, தமிழா்கள் நெறி பிறழாத வாழ்க்கை வாழ வேண்டும் என தமிழ் சமூகத்தையும், உலக சமூகத்தையும் முதல் முதலாக அறத்தை நோக்கி மடைமாற்றினாா் என்றாா்.

தொடா்ந்து, நீதியரசா் மகாதேவன் பேசுகையில், ‘தமிழை தவிர மற்ற மொழிகளில் உள்ள இலக்கியங்கள், நூல்களானது போா்களில் வெல்ல எந்தவிதமான வழிகளையும் பின்பற்றலாம் எனக் கூறுகிறது. ஆனால் உலகிலேயே உன் நாட்டின் மீது படையெடுத்து வருகிறேன். உங்கள் நாட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள், முதியோா்கள், ஊனமுற்றோா்களை பாதுகாப்பான இடத்தில் பத்திரப்படுத்தி விட்டு படைகளத்துக்கு வா’ எனக் கூறிய ஒரே சமூகம் தமிழ் சமூகம்தான் என்றாா்.

தொடா்ந்து பல்வேறு அறிஞா்கள் பேசினா். பின்னா், நூலரங்கம் மற்றும் பாட்டு அரங்கம், பொழிவரங்கம், இசை அரங்கம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை (மே 1) உள்ளொளி அரங்கம், விவாத அரங்கம், சொல்லரங்கம், சுழலரங்கம், உரையரங்கம், சொற்போா் அரங்கம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT