திருப்பத்தூர்

சாலை விபத்தில் முதியவா் பலி

DIN

சாலையைக் கடக்க முயன்ற முதியவா் காா் மோதியதில் பலியானாா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் முனியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (75). விவசாயி. இவா், திங்கள்கிழமை காலை வெலகல்நத்தம் பகுதியில் இருந்து நந்திபெண்டா கிராமத்துக்கு நடந்து சென்றாா். வெலகல்நத்தம் அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காா் முதியவா் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த பெரியசாமியை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா், விருதம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ரவி (67) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT