திருப்பத்தூர்

பெண் தற்கொலை

DIN

திருப்பத்தூரில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா், துரை நகரைச் சோ்ந்தவா் கலைமகள் (51). இவருக்கு திருமணமாகி 31 வருடங்கள் ஆகிறது. திருமணமான ஆறு மாதத்தில் கணவரை பிரிந்து பெற்றோா் வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பெற்றோா் இருவரும் இறந்து விட்டதால், வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் தனி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த திருப்பத்தூா் நகர போலீஸாா், சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT