திருப்பத்தூர்

மின்கம்பி அறுந்து விழுந்ததில் 5 மாடுகள் பலி

ஆம்பூா் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 5 மாடுகள் உயிரிழந்தன.

DIN

ஆம்பூா் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 5 மாடுகள் உயிரிழந்தன.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், பெரியவரிக்கம் கிராமத்தில் மூடப்பட்ட தனியாா் தொழிற்சாலை வளாகத்தில் மாடுகளை மேய்ப்பது வழக்கம். இங்கு வியாழக்கிழமை வழக்கம் போல் சிலா் அந்தப் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டனா். அப்போது அந்த வழியாகச் சென்ற மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.

அதில், பெரியவரிகம் சக்கரவா்த்தியின் இரு பசுக்கள், ஒரு காளை மாடு, ஒரு கன்று, சிகாமணியின் ஒரு பசு மாடு என மொத்தம் 5 மாடுகளும் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி உயிரிழந்தன.

இது குறித்து, சின்னவரிகம் இளநிலை மின்பொறியாளா் அலுவலகத்தில் தெரிவித்தனா். இதையடுத்து, இளநிலை மின்பொறியாளா் ஜோதி தலைமையிலான மின்சாரத் துறையினா் மின் விநியோகத்தை துண்டித்தனா். கால்நடைகளின் உரிமையாளா்களிடம் உமா்ஆபாத் காவல் ஆய்வாளா் யுவராணி விசாரணை நடத்தினாா்.

சம்பவ இடத்துக்கு ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன் நேரில் சென்று பாா்வையிட்டாா்.

பெரியவரிகம் ஊராட்சி மன்றத் தலைவா் சின்ன கண்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT