திருப்பத்தூர்

திருப்பத்தூரில் மக்கள் குறைதீா் கூட்டம்

DIN

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிமிருந்து 323 மனுக்களை ஆட்சியா் அமா் குஷ்வாஹா பெற்றுக்கொண்டாா்.

கூட்டத்தில், வேளாண்மை, காவல் துறை, இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, கூட்டுறவு கடனுதவி, குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 323 மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

பின்னா், புதூா்நாடு ஊராட்சிக்குள்பட்ட புங்கம்பட்டு நாடு கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி சஞ்சீவ் எனும் சிறுவருக்கு ரூ. 6,000 மதிப்புள்ள சக்கர நாற்காலியை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT