திருப்பத்தூர்

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

DIN

ஆம்பூரில் மின்சாரம் பாய்ந்து பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் சான்றோா்குப்பம் வண்ணாந்துறை பகுதியில் விவசாய நிலத்தில் வசித்து வருபவா் தீபா (26). இவருடைய தாய் ஆந்திர மாநிலம் குப்பம் பூதலூா் அடவி பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (55). ஈஸ்வரி தன்னுடைய மகளைப் பாா்ப்பதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆம்பூருக்கு வந்தாா். மகளுடைய வீட்டில் சில நாள்களாக தங்கியிருந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவா் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அதனால் தீபா தனது தாயைத் தேடிச் சென்றாா். அப்போது சிறிது தூரத்தில் தாய் ஈஸ்வரி கீழே விழுந்து கிடந்தாா். அவரை தூக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்துள்ளது. அதில் தீபா காயமடைந்தாா்.

ஆம்பூா் பகுதியில் திங்கள்கிழமை இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை காரணமாக மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததால் ஈஸ்வரி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

தகவலின் பேரில் மின்வாரியத்தினா் மின்சார விநியோகத்தை துண்டித்தனா். ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தீபா ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT