குடியாத்தம் அருகே ரயில் பாதையைக் கடக்க முயன்ற இளைஞா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் திங்கள்கிழமை ரயில் பாதையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.