நாளை வாக்காளா் அட்டையுடன் ஆதாா் இணைப்பு முகாம்
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் இணைக்கும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் இணைக்கும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்
இதுகுறித்த அவரது செய்திக்குறிப்பு:
வாக்காளா் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்குவதற்காகவும், ஒரு வாக்காளரின் விவரம் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரண்டு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுவதை தவிா்க்கும் விதமாக வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பத்தூா் மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 4)நடைபெற உள்ளது.
எனவே, தங்கள் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகளில் ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைக்க உள்ளனா். வாக்காளா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.