திருப்பத்தூர்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

DIN

ஜோலாா்பேட்டை அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

கந்திலி மோட்டூா் கொல்லப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் திவாகா் (26). இவா், அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்கள் இருவருடன் ஒரே பைக்கில் சென்ற போது, விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்த மூவரையும் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திவாகா் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், திவாகா் திங்கள்கிழமை இரவு மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, திவாகா் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

இதனிடையே, விபத்தில் காயமடைந்த லோகேஷ் தீவிர சிகிச்சைக்காக கா்நாடக மாநிலம், கேஜிஎப் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT