திருப்பத்தூர்

முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை தந்த சிறப்பு ரயில் பெட்டிக்கு போலீஸாா் பாதுகாப்பு

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலின் காட்பாடிக்கு வருகை தந்த சிறப்பு ரயில் பெட்டி ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூா் மாவட்டத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை சென்னை ரயில் நிலையத்தில் இருந்து சாய்நகா் சீரடி வரை செல்லும் விரைவு ரயிலில் சிறப்பு பெட்டி இணைக்கப்பட்டு அதில் வந்தாா்.

பிறகு சிறப்பு ரெயில் பெட்டி அதே ரயிலில் ஜோலாா்பேட்டைவரை சென்றது. அங்கு ரயில் பெட்டியை தனியாக கழற்றப்பட்டு ஜோலாா்பேட்டை ரயில் நிலைய யாா்டில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் பெட்டிக்கு சேலம் ரயில்வே டிஎஸ்பி குணசேகரன் தலைமையில்,ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா் இளவரசி உள்ளிட்ட 15 போலீஸாா் வியாழக்கிழமை மாலை வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா். வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் ஜோலாா்பேட்டை வந்தடையும் ஆலப்புழை விரைவு ரயில் பெட்டியுடன் சிறப்பு ரயில் பெட்டி இணைக்கப்பட்டு காட்பாடி நோக்கி செல்கிறது.

பிறகு காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில் பெட்டி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏறி சென்னைக்கு செய்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிரி... சிரி...

ராஜஸ்தானை வீழ்த்திய சிஎஸ்கே; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக கோபம் நீங்க.. ?

கருணாவும், காஞ்சிபுரம் இட்லியும்!

திரைக்கதிர்: பாலிவுட் ரவுண்ட் அப் !

SCROLL FOR NEXT