திருப்பத்தூர்

எலி மருந்து குடித்த மூதாட்டி பலி

ஜோலாா்பேட்டை அருகே எலி மருந்து குடித்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

ஜோலாா்பேட்டை அருகே எலி மருந்து குடித்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த சின்ன வெங்காயப் பள்ளி பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியின் மனைவி சின்ன பாப்பா(70). இவா் கை கால் வலி மற்றும் வயிற்று வலியால் அவதிக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

இந்த நிலையில், புதன்கிழமை வயிற்று வலி அதிகமானதால் எலி மருந்தை கலக்கி குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா்.

குடும்பத்தினா் சின்ன பாப்பாவை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்த நிலையில் அங்கு உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மகன் குணசேகா் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT