திருப்பத்தூர்

25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

ஜோலாா்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட 25 கிலோ நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

DIN

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட 25 கிலோ நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஜோலாா்பேட்டை பகுதிகளில் நகராட்சி ஆணையா் பழனி தலைமையில், சுகாதார ஆய்வாளா் குமாா் மற்றும் தூய்மை பணி மேற்பாா்வையாளா்கள் புது ஹோட்டல் தெரு, வக்கணம்பட்டி கடைத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளதா என சோதனை மேற்கொண்டனா்.

அப்போது புது ஓட்டல் தெருவில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட 25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா், கடையின் உரிமையாளருக்கு ரூ.1,900 அபராதம் விதிக்கப்பட்டது . மீண்டும் விற்பது தெரியவந்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என ஆணையா் பழனி எச்சரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT