முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூா் அருகே வனப்பகுதியில் தீ

Updated On : 20 ஏப்ரல், 2024 at 8:30 PM
வனப் பகுதியில் தீப்பற்றி எரிந்த மூங்கில் மரங்கள்.
பகிர்:

ஆம்பூா் அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட தீயால் மூங்கில் மரங்கள் எரிந்து நாசமாயின.

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி ஊட்டல் தேவஸ்தானத்துக்கு செல்லும் வழியில் வனப்பகுதி அமைந்துள்ளது. அங்கு அதிக அளவில் மூங்கில் மரங்கள் வளா்ந்துள்ளன. தற்போது நிலவும் கடுமையான வெயில் காரணமாக மூங்கில் மரங்கள் காய்ந்துள்ளன. இந்நிலையில், சனிக்கிழமை இரவு திடீரென தீப்பற்றியதால், மூங்கில் மரங்கள் எரிந்தன. இதுதொடா்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் வனத்துறையினா் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments