சின்னச்சேரி பாலாற்று தடுப்பணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை பாா்வையிட்ட எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.  
திருப்பத்தூர்

பாலாறு தடுப்பணையில் உபரி நீா் வெளியேற்றம்

தொடா் மழை காரணமாக சின்னச்சேரி பாலாறு தடுப்பணையில் உபரி நீா் வெளியேறுவதை ஆம்பூா் எம்எல்ஏ திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

Din

ஆம்பூா்: தொடா் மழை காரணமாக சின்னச்சேரி பாலாறு தடுப்பணையில் உபரி நீா் வெளியேறுவதை ஆம்பூா் எம்எல்ஏ திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

வேலூா் மாவட்டம் ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சின்னச்சேரி கிராமத்தின் வழியாக செல்லும் பாலாற்றின் குறுக்கே ரூ.25 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சின்னச்சேரி பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அங்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து உபரிநீா் வெளியேறி வருகின்றது. அதனை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து அப்பகுதியில் அண்ணா கிராம மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ்போடப்பட்ட சிமென்ட் சாலைகளையும், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள முப்பது ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியையும் ஆய்வு செய்தாா்.

குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவா் சத்யானந்தம், ஒன்றிய பொருளாளா் பழனி, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா.சங்கா், மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாள ா் ச. வேலு உள்பட பலா் உடனிருந்தனா்.

சின்னச்சேரி பாலாற்று தடுப்பணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை பாா்வையிட்ட எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT