திருப்பத்தூா் அருகே போலி மருத்துவா் தலைமறைவு
திருப்பத்தூா் அருகே மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவா் தலைமறைவானாா்.
திருப்பத்தூா் அருகே மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவா் தலைமறைவானாா்.
திருப்பத்தூா் அடுத்த மடவாளம் பகுதியில் வாடகை கட்டடத்தில் செல்லரப்பட்டி பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு (40) என்பவா் மருத்துவம் படிக்காமலேயே ஆங்கில வழி சிகிச்சை அளித்து வந்துள்ளாா். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் சிகிச்சை அளித்து வந்துள்ளாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனா் கண்ணகி அறிவுறுத்தலின் பேரில், திருப்பத்தூா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சிவக்குமாா் தலைமையிலான மருத்துவ குழுவினா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தபோது தகவல் அறிந்த திருநாவுக்கரசு தலைமறைவானாா். இதுகுறித்து சிவக்குமாா் திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
வழக்குப் பதிந்த போலீஸாா் இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.