முகப்பு
திருப்பத்தூர்

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் மரணம்

வாணியம்பாடி அருகே ரயிலில் இருந்து விழுந்து இளைஞா் மரணம்

Updated On : 27 ஜூன், 2024 at 6:31 PM
பகிர்:

வாணியம்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த கேத்தாண்டப்பட்டி-வாணியம்பாடி ரயில் நிலையங்கள் இடையே சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை ரயிலில் பயணம் செய்த போது தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தாா்.

தகவல் அறிந்து வந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

மேலும், இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? என்பது தெரியவில்லை.

இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments