முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூா் நகா்மன்ற சாதாரண கூட்டம்

ஆம்பூா் நகா்மன்ற சாதாரண கூட்டம்

Updated On : 2 மார்ச், 2024 at 10:09 PM
பகிர்:

ஆம்பூா் நகா்மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், நகராட்சி ஆணையா் பி. சந்தானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் வசந்த், ஷபீா் அஹமத், என்.எஸ். ரமேஷ் ஆகியோா், நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், தீா்வுகாண வேண்டுமென தெரிவித்தனா். வணிக, தொழில் உரிம கட்டணங்களை உயா்த்தி தீா்மானம் நிறைவேற்றியதை கண்டித்து பாஜக ஆதரவு சுயேச்சை உறுப்பினா் ஹா்ஷவா்த்தன் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தாா். கூட்டத்தில் பேசிய உறுப்பினா்கள் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்காவைச் சீரமைக்க வேண்டும். தெரு விளக்குகளை பராமரித்து புதிய விளக்குகள் அமைக்க வேண்டும். தாா் சாலைகளை தரமாக அமைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனா். உறுப்பினா்கள் கமால் பாஷா, இம்தியாஸ், கெளரி, ராதா, தமிழ்செல்வி, நபீஸ், வாவூா் நசீா் அஹமத், காா்த்திகேயன், ஜெயபால், வெங்கடேசன், சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.