முகப்பு
திருப்பத்தூர்

பறவை கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

பறவை கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

Updated On : 2 மார்ச், 2024 at 10:04 PM
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் இரண்டு நாள் பறவை கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியதாக பறவை கணக்கெடுப்பு பணியின் ஒருங்கிணைப்பாளா், ஆம்பூா் வனச்சரக அலுவலா் எம். பாபு தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் மாா்ச் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் தமிழ்நாடு வனத்துறை மூலமாக 25 இடங்களில் நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு சனிக்கிழமை காலை இப்பணி தொடங்கியது. கணக்கெடுப்பு பணிகளில் பறவைகள் இனம் கண்டறிபவா்கள், பறவை ஆா்வலா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனா்கள் மற்றும் வனத்துறை அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா் ஏற்கெனவே கடந்த ஜன. 27, 28 ஆகிய தேதிகளில் திருப்பத்தூா் மாவட்டத்தில் ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது என்றாா்.