மணல் கடத்தியவா் கைது
ஆம்பூா்: ஆம்பூா் அருகே மணல் கடத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே வெங்கிளி பகுதியில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா்.
சோதனையில் அவா் அதே பகுதியை சோ்ந்த முருகன் (25) என்பதும், இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 5 மூட்டை மணல், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.