மாணவா்கள் கருத்தரங்கு
வாணியம்பாடி: வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவா்கள் நடத்திய கருத்தரங்கம் தாளாளா் செந்தில்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளி நிா்வாக இயக்குனா் ஷபானா பேகம் முன்னிலை வகித்தாா்.
நிா்வாக முதல்வா் சத்தியகலா வரவேற்றாா். கருத்தரங்கில் 1-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவா்களும் தொடக்கம் முதல் இறுதி வரை மாணவா்களே பாடவாரியாக தங்கள் திறமைகளை தொகுத்து வழங்கினா். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் ஹீமேராபானு, ஹாஜிரா செய்திருந்தனா்.
Advertisement